7.7.16

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 420¸423¸120(பி)

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை
முன்னிலை: திருமதி.வா.தீபா¸ எம்.எல்
நீதித்துறை நடுவர் எண்- 1
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் நாள் செவ்வாய்கிழமை
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் . 30 / 2008

குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
சிவகங்கை நகர் காவல் நிலையம்
குற்ற எண் 1069/2005

குற்றம் சாட்டப்பட்டவர் :
1. சீனிவாசன்¸ (வயது 52-06)
.பெ. நாராயணன்¸
13. தென்னஞ்சட்டி¸
மணி
வடக்கு அக்ரஹாரம்¸
தேவகோட்டை.

2.நாராயணன்¸ (வயது 54-06)
.பெ. வீரராகவன்.
போகலூர் குரூப்¸
கிராம நிர்வாக அதிகாரி¸
வாலான் குடி¸
பரமக்குடி.

3. என். அலமேலு¸ (வயது 52-2006)
.பெ. நாராயண அய்யங்கார்¸
127-54 வடக்கு¸
அக்ரஹாரம்¸
தேவகோட்டை () கண்ணமங்கலம்¸
இளையான்குடி.

4. எஸ். வசந்தா. (வயது 49-06)
.பெ. சீனிவாசன்¸
தென்னஞ்செட்டி ஊரணி¸
வடக்கு அக்ரஹாரம்¸
தேவகோட்டை.

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

குற்றம் முறையிடப்பட்டது : குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸120(பி) ன் கீழ் குற்றம் முறையிடப்பட்டது

குற்றம் வனையப்பட்டது : குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸120(பி) ன் கீழ் குற்றம் வனையப்பட்டது.

தண்டனை விவரம் :  குற்றவாளிகள்

தீர்மானம் : அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸120(பி) ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளன.

தீர்ப்பு : இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸ 120(பி) ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபித்துள்ளதால் எதிரிகள் குற்றவாளிகள் என தீர்மானித்து இத. பிரிவு 420 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 6 மாதம் மெய்காவல் சிறைதண்டனை விதித்தும்¸ அபராதம் தலா ரூ.100/-விதித்தும்¸ அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும்¸ இதச. பிரிவு 423 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா அபராதம் ரூ.50/-விதித்தும் அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். இதச. பிரிவு 120(பி) ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா அபராதம் ரூ.50/விதித் தும்¸ அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். கு. வி.மு.. பிரிவு 248(2) ன் கீழ் தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வழக்கில் சொத்துக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.


1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
சாட்சி 1 சிவகங்கை கதவு எண். 39 போலீஸ் ஸ்டேசன் ரோடு என்ற முகவரியில் குடியிருந்து வரும் போது¸ 5.1.2003 ம் தேதி¸ 2 வது குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சி 1 டம் தனக்கு வீடு கட்டுவதற்கு 3 ரூபாய் வட்டிக்கு ரூ.5 லட்சம் தேவை என்று கூறி¸ அதற்கு ஈடாக தனக்குச்சொந்தமான தேவகோட்டை தென்னஞ்செட்டி ஊரணியில் உள்ள 10 லட்சம் பெறுமானமுள்ள வீட்டை அடமானமாக எழுதித்தருவதாக கூறி¸ 1 முதல் 4 குற்றம்சாட்டப்பட்டவர்கள் சேர்ந்து திட்டம் தீட்டி¸ தேவகோட்டையில் சாட்சி 6 ன் இடத்தை காண்பித்து¸ தேவகோட்டையில் போலி பத்திரம் ஒன்று தயார் செய்து¸ அதில் 1¸2 குற்றம்சாட்டப்பட்டவர்கள் கையொப்பம் செய்தும்¸ 3¸4 குற்றம்சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளாக கையொப்பம் செய்தும்¸ சாட்சி 1 டம் ரூபாய் 4¸95¸000/ம் பெற்று போலி ஆவணப்பத்திரதை எழுதிக்கொடுத்து மோசடி செய்ததாக 1 முதல் 4 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதச.420¸423¸ 120(பி) ன் கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.

3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸120(பி) ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

4. அரசு தரப்பில் .சா.1 முதல் 8 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். .சாஆ. 1 முதல் .சா . 5 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன. .சா.1 கொடுத்த புகார் மனு .சா..1 ஆகும். ரூ.2¸45¸000/- க்கு எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..2 ஆகும். ரூ.2¸50¸000/க்கு எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..3 ஆகும். தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட ஆவணத்தின் சான்றிட்ட நகல் .சா..4 ஆகும். முதல் தகவல் அறிக்கை .சா..5 ஆக குறியிடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சி 1 முதல் 7 வரை அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள். .சா.8 தனது புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்து உள்ளார்.

5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு..313(1)()ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசு தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்கள்.

6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா? என்பதாகும்.

7. பிரச்சனை
 இந்த வழக்கில் நிகர்நிலை புகார்தாரரான குணசேகரன்¸ சிவகங்கையில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார் என்றும்¸ பரமக்குடியில் இருக்கும்¸ நிகர்நிலை புகார்தாரின் உறவினரான இந்த வழக்கின் 2 வது எதிரி நாராயணன்¸ 1 வது எதிரி சீனிவாசன் என்பவரை மேற்படி நிகர்நிலை புகார்தாரருக்கு அறிமுகம் செய்து வைத்து¸ 1 வது எதிரிக்கு அவசர குடும்ப செலவிற்காகவும்¸ வீடு கட்டுவதற்காகவும் பணம் தேவைப்படுதாகச் சொல்லி¸ ரூ. 5¸00¸000/-த் தை 3% வட்டிக்கு நிகர்நிலை புகார்தாரர் கொடுத்தார் என்றும்¸ அதற்கு ஆதரவாக 1 வது எதிரிக்கு சொந்தமான ரூபாய் 10¸00¸000/-லட்சம் மதிப்புள்ள தேவகோட்டையில் உள்ள தி.ஊரணி¸ அக்ரஹாரம் பழைய கதவு எண்.7¸ புதிய கதவு எண்.3 ல் உள்ள வீட்டை¸ ஆதரவாக காண்பித்து¸ 2 கடனுறுதி பத்திரங்களை 2 வது எதிரி எழுதி¸ 1 வது எதிரி கையொப்பம் செய்து கொடுத்துள்ளார் என்றும்¸ அதில் 1 மற்றும் 2 வது எதிரிகளுடைய மனைவிகளும் சாட்சியாக கையொப்பம் செய்தனர் என்றும்¸ 2 நாட்கள் கழித்து 2 வது எதிரி வாதியிடம் வந்து¸ வாதியும் 1 வது எதிரியும் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் என்பதால்¸ 1 வது எதிரி மிகவும் சிரமப்படுகிறார் என்றும் வட்டியை குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார். வாதி குணசேகரன் அதற்கு சம்மதித்து¸ வங்கி வட்டி தந்தால் போதும் என்று சொல்லிவிட்டார் என்றும் ஆனால் நாளது தேதி வரை¸ வாதிக்கு எந்த பணமும் திருப்பித் தரப்படவில்லை என்றும் ஆதரவாக காண்பித்துள்ள வீடும் 1 வது எதிரியினுடையது அல்ல என்பதை அறிந்த பிறகே¸ 1 மற்றும் 2 எதிரிகள் தன்னை மோசம் செய்த விவரம் வாதிக்கு தெரிய வந்தது என்றும் இது தொடர்பாக வாதி தரப்பு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு அனுப்பியும்¸ உரிய பதில் இல்லை என்றும் எனவே 1 முதல் 4 எதிரிகள் வாதியை மோசம் செய்யும் நோக்கத்தோடு வேறு ஒருவருக்கு சொந்தமான வீட்டை 1 வது எதிரியுடையது என்று கூறி¸ வீட்டை வைத்து ரூ.4¸95¸000/-மோசடி செய்துள்ளனர் என்றும் எதிரிகள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

8. இந்த வழக்கின் நிகர்நிலை புகார்தாரர் .சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தனது முதல் விசாரணையின் போது¸ 1 வது எதிரி சீனிவாசன் என்பவரை¸ 2 வது எதிரி நாராயணன் தனக்கு அறிமுகப்படுத்தி¸ 1 வது எதிரிக்கு வீடு கட்டுவதற்கும்¸ வீட்டுசெலவிற்காகவும்¸ 3% வட்டிக்கு ரூ. 5¸00¸000/-தேவைப் படுவதாக கூறி¸ 2 வது எதிரி அதற்கு பொறுப்பேற்பதாக சொல்லி¸ 2 வது எதிரி¸ 1 வது எதிரிக்கு தன்னிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தார் என்றும்¸ இராமநாதபுரத்தில் இருந்த தன்னுடைய பூர்வீக வீட்டை விற்று இருந்த ரூ.2¸00¸000/-ரொக்கம் தன்னுடைய வியாபாரம் மூலம் கிடைத்த ரூ.1¸00¸000/-ம் தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் சேர்த்து¸ 2 வது எதிரி முழு பொறுப்பேற்று¸ ரொக்கமாக சிவகங்கையில் உள்ள தனது வீட்டில் வைத்து எதிரிகள் 4 பேரும் வந்து¸ தன்னிடம் இருந்து வாங்கி¸ தொகையை 1 வது எதிரி சீனிவாசனிடம் கொடுத்தனர் என்றும்¸ மேற்படி ரூபாய் 4¸95¸000/-தொகையானது சீனிவாசனிடம் தன்னால் கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி வாதியால் கொடுத்த பணத்திற்கு ஆதரவாக¸ 1 வது எதிரிக்கு பாத்தியப்பட்டது என்று கூறி தேவகோட்டையில் இருந்த ஒரு வீட்டை கடனுக்கு ஆதரவாக 1 வது எதிரி எழுதி கொடுத்தார் என்றும்¸ அந்த பத்திரத்தை 2 எதிரி எழுதினார் என்றும¸ 3¸ 4 எதிரிகள் சாட்சி கையொப்பம் செய்தனர் என்றும் .சா.1 தெரிவித்துள்ளார். தான் எதிரிகளிடம் பணம் கேட்டதற்கு எதிரிகள் தனக்கு பணம் கொடுக்கவில்லை என்றும்¸ அதன்பிறகு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு கொடுத்தேன் என்றும்¸ தேவகோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் சென்று எதிரிகள் ஈடாக எழுதி கொடுத்த சொத்திற்கு வில்லங்கம் போட்டு பார்த்ததில்¸ மேற்படி வீடானது மதுரை கற்பகம் விநாயநகரில் வசிக்கும் முத்துலெட்சுமிக்கு சொந்தமானது என்பது தெரிந்து கொண்டதாகவும் எதிரிகள் தன்னை மோசடி செய்து விட்டதாகவும் .சா.1 தெரிவித்துள்ளார். .சா..1 ஆக புகார் மனு குறியீடு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டையில் உள்ள வீட்டை பணம் பெற்று கொண்டதற்கு ஆதரவாக ரூபாய் 2¸45¸000/-எழுதிக் கொடுத்த ஆவணம் .சா..2 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதே தேதியில் அதே வீட்டை ரூ.2¸50¸000/-க்கு எழுதிக்கொடுத்த ஆவணம் .சா..3 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயபத்திர ஆவணத்தில் பதியப்பட்ட சான்றிட்ட நகல் .சா..4 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது.

9. .சா.2 ஆக .சா.1 ன் சகோதரி விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ தன்னிடம் இருந்து எதிரிகள் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்றும்¸ 1 வது எதிரிக்கு வீடு கட்ட வேண்டி¸ 2 வது எதிரி ரூ.4¸95¸000/-வேண்டுமென்று கேட்டு வாதியிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு¸ 5.1.03 ம் தேதி தேவகோட்டையில் உள்ள 1 வது எதிரியின் வீட்டை தன்னிடம் வாங்கிய பணத்திற்காக¸ 2 வது எதிரி கைப்பட பத்திரம் எழுதி கொடுத்தார் என்றும்¸ அதன் பிறகு தேவகோட்டைக்கு சென்று¸ தானும் தனது சகோதரனும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சொத்துக்களுக்கு வில்லங்கம் எடுத்துப்பார்த்த போது¸ சொத்து 1 வது எதிரியின் கொழுந்தியாள் முத்துலெட்சுமிக்கு பாத்தியமானது என்று தெரியவந்துள்ளது என்றும்¸ தங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்த பூர்வீக வீட்டை விற்று அதில் வந்த பணம் மற்றும் தனது திருமணத்திற்காக தனது அண்ணன் சேர்த்து வைத்திருந்த தொகை அனைத்தும் சேர்த்து கடனாக கொடுக்கப்பட்டது என்றும்¸ எதிரிகள் 4 பேரும் தன்னையும் தனது சகோதரனையும் மோசடி செய்து விட்டார்கள் .சா.2 தெரிவித்துள்ளார்.

10. எதிரிகளுக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்த சாட்சியாக .சா.3 விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ முதல் நாள் ரூ.1¸15¸000/-வாங்கி சென்றதாகவும்¸ இரண்டு நாட்கள் கழித்து¸ .சா.1 ன் வீட்டில் வந்து¸ எதிரிகள் ரூ.1¸20¸000/-பெற்றுச்சென்றதாகவும்¸ 5.1.03 ம் தேதியன்று¸ தான் .சா.1 ன் வீட்டில் இருந்த போது¸ இந்த வழக்கில் 4 எதிரிகளும் வந்து ரூ.2¸50¸000/-.சா.1 டம் இருந்து பெற்றுச்சென்றதாகவும்¸ நாராயணனும்¸ சீனிவாசனும் அன்றைய தினம் பத்திரம் ஒன்று எழுதி¸ மூன்று மாதத்தில் பணம் கொடுப்பதாக சொல்லி சென்றதாகவும்¸ 3 கட்டங்களில் எதிரிகள் பணம் பெற்று சென்ற போது¸ தான் .சா.1 ன் வீட்டில் இருந்ததாகவும் அதன்பிறகு எதிரிகள் பணம் பெற்று சென்றதாகவும்¸ பணம் திருப்பி கொடுத்தார்களா என்று கேட்ட போது¸ யாருடைய வீட்டையோ தங்களுடையது என்று போலி பத்திரம் செய்து கொடுத்து¸ எதிரிகள் .சா.1¸2 யை ஏமாற்றிவிட்டதாக கூறியதாக சாட்சியம் அளித்துள்ளார்.

11. எதிரிகளுக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்த சாட்சியாக .சா.4 ம் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ 5.1.03 ம் தேதிக்கு¸ 5 நாட்களுக்கு முன்பாக¸ இந்த வழக்கில் 4 எதிரிகள் தனது பெரியம்மா வீட்டிற்கு சிவகங்கைக்கு வந்து¸ தன் அண்ணன் குணசேகரனை வந்து சந்தித்ததாகவும் சீனிவாசன் என்பவர் தேவகோட்டையில் வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும்¸ அதற்கு பணம் தேவைப்படுவதாக¸ சீனிவாசன் நாராயணன்¸ தனது சகோதரன் குணசேகரிடம் கேட்டதாகவும்¸ அன்றைய தினம் ரூ. 1¸25.000/- நாராயணன்¸ சீனிவாசன் பெற்று சென்றதாகவும். குணசேகரனுடைய பூர்வீக வீடு ராமநாதபுரத்தில் இருந்ததை விற்பனை செய்து பணம் வைத்திருந்ததாகவும்¸ 1 நாள் விட்டு 3 வது நாள் இந்த வழக்கின் 4 எதிரிகளும் ரூ.1¸20¸000/- குணசேகரனிடம் இருந்து சீனிவாசன் நாராயணன் பெற்று சென்றதாகவும்¸ அதன் பிறகு 5.1.03 ம் தேதியன்று¸ 4 எதிரிகளும் சிவகங்கையில் உள்ள .சா.1 ன் வீட்டிற்கு வந்து குணசேகரனிடம் இருந்து ரூ.2¸50¸000/-பெற்று சென்றதாகவும்¸ ரூ.2¸45¸000/-க்கு ஒரு பத்திரமும் ரூ.2¸50¸000/க்கு ஒரு பத்திரமும்¸ எழுதிக்கொடுத்து விட்டு சென்றதாகவும்¸ பின்னர் .சா.1 னிடம் விசாரித்த போது¸ பத்திரத்தில் காட்டியுள்ள சொத்துக்கள் அவருக்கு பாத்தியப்பட்டவை அல்ல என்றும் பணத்தை வாங்கிவிட்டு திரும்பக் கொடுக்காமல் எதிரிகள் மோசடி செய்து விட்டதாகவும்¸ .சா.1¸2 விசாரித்து தெரிந்து கொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் குறுக்கு விசாரணையில்¸ பணம் 3 தவணையாக கொடுத்ததாக சொல்லியுள்ளார். மேலும் பத்திரம் எழுதிக்கொடுக்கும் போது¸ தான் இருந்ததாகவும்¸ 2 பத்திரங்கள் எழுதிக்கொடுத்தார்கள் என்றும் சொல்லியுள்ளார்.

12. 1 வது எதிரிக்கு ஆதரவாக எழுதிக்கொடுத்த தேவகோட்டை வீட்டின் உரிமையாளர் .சா.5 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ மேற்படி வீட்டில் எதிரிக்கு எந்த பாத்தியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் "இவ்வழக்கின் 1 வது எதிரி எனது தங்கையின் கணவர் ஆவார். சொத்தினைப் பார்த்துக்கொள்ளதான் எனது சகோதரி லெட்சுமி என்பவரிடம் சொல்லியுள்ளோம். சொத்தில் அவருக்கோ அல்லது கணவர் சீனிவாசனுக்கோ எந்த பாத்தியமும் இல்லை." என்று முதல் விசாரணையில் சொல்லியுள்ளார். குறுக்கு விசாரணையின் போது¸ மேற்படி வீடு தங்கையின் கணவர் பராமரிப்பில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

13. .சா.6 தன்னுடைய சாட்சியத்தில்¸ வாதி எதிரிகளுக்கு ரூ.4¸95¸000/-கொடுத்தது தனக்கு நேரடியாக தெரியும் என்றும்¸ குணசேகரன் தனது பூர்வீக வீடு ராமநாதபுரத்தில் உள்ளதை விற்பனை செய்து வைத்து இருந்ததாகவும் தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் சேர்த்து எதிரிகளிடம் கொடுத்தார் என்றும் சாட்சியம் அளித்துள்ளார். குறுக்கு விசாரணையில் போது¸ 1 வது எதிரியின் மகளைத்தான் தனக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்றும்¸ இந்த வழக்கின் வரவு செலவு நடக்கும் போது¸ தானும் 1 வது எதிரியும் பேசிகொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

14. .சா.7 ஆக விசாரிக்கப்பட்டுள்ளவர் தன்னுடைய சாட்சியத்தில்¸ சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியில் இருந்த போது¸ 6.10.05 தேதி அன்று மாலை 17.30 மணிக்கு சிவகங்கை நீதித்துறை நடுவர் 1 ல் இருந்த வரப்பெற்ற தபாலை பெற்று¸ அதில் வாதியின் புகார் மனுவை பார்வையிட்டு¸ குற்ற எண். 1069-2005 ல் இதச. பிரிவு 420¸423 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

15. சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் .சா.8 ஆக விசாரிக்கப்பட்டுள்ளவர் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த போது¸ நிலைய குற்ற எண். 1069-05 ல் இதச. பிரிவு 420¸423 ன் வழக்கில் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில்¸ சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார் என்றும்¸ தான் அந்த வழக்கு கோப்பை பார்வையிட்டு சாட்சிகளை மறு விசாரணை செய்ததாகவும்¸ ஏற்கனவே சாட்சிகள் சொல்லி இருந்த வாக்குமூலம் ஒத்துப்போனதால் பதிவு செய்யவில்லை என்றும்¸ 5.11.06 தேதி இது தொடர்பாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.

16. .சா..1 ஆக வாதி குணசேகரன் கொடுத்த புகார் மனு குறியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இராமநாதபுரத்தில் இருந்த குணசேகரனின் பூர்வீக வீட்டை விற்ற பணத்தையும்¸ அவரது சகோதரியின் திருமணத்திற்காக சேமித்த பணத்தையும் சேர்த்து¸ ரூ.4¸95¸000/- 5.1.2003 ம் தேதி ரொக்கமாக கொடுத்து அன்றைய தேதியிலேயே தேவகோட்டையில் தி.ஊரணி அக்ரஹாரம் பழைய கதவு எண்.7 புதிய எண். 3 ல் உள்ள வீட்டை ஆதரவாக காண்பித்து இரண்டு கடனுறுதிப்பத்திரங்களை 1 வது எதிரி எழுதிகொடுத்தார் என்றும்¸ மேற்படி கடனுறுதி பத்திரங்களை 2 வது எதிரி எழுதினார் என்றும்¸ அதில் 1 மற்றும் 2 வது எதிரிகளின் மனைவிகளுமே சாட்சி கையொழுத்து செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

17. 5.1.03 தேதி¸ 1 வது எதிரிக்கு வாதி எழுதி கொடுத்த ஆவணம் .சா..2 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணத்தில் 3% வட்டிக்கு ரூ. 2¸45¸000/-மட்டும் 1 வது எதிரி வாதியிடமிருந்து கடனாக பெற்று கொண்டதாகவும்¸ அதற்கு ஆதரவாக தேவகோட்டை நகரில் உள்ள தி.ஊரணி பழைய கதவு எண்புதிய கதவு எண். 3 ல் உள்ள வீட்டை ஆதரவாக எழுதி கொடுத்ததாக கண்டுள்ளது. மேற்படி வாதி ரூ.2¸50¸000/- க்கு 3% வட்டி பெற்றுக் கொண்டு அதே தேதியில் அதே வீட்டை ஆதரவாக எழுதி கொடுத்ததாகவும் கண்டுள்ள ஆவணங்கள் .சா..3 ஆக குறஷியீடு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் .சா.5 ஆக சீனிவாசன் மனைவி முத்துலெட்சுமி விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் வாதிக்கு 1 வது எதிரி ஆதரவாக எழுதி கொடுத்த வீடு தனக்கு பாத்தியப்பட்டது என்றும்¸ 1 வது எதிரி தன்னுடைய தங்கையின் கணவர் என்றும் மேற்படி 1 வது எதிரிக்கும்¸ அவருடைய மனைவிக்கும் இந்த சொத்தில் எந்த பாத்தியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். .சா.5 முத்துலெட்சுமி என்பவருக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட கிரையபத்திரத்தின் சான்றிட்ட நகல் குறியீடு செய்யப்பட்டது.

18. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ள .சா.1 முதல் 4 மற்றும் .சா.6 ஆகியவர்களின் சாட்சியங்களிலிருந்து பாhக்கும் போது¸ 1-வது எதிரியை 2 வது எதிரி வாதிக்கு அறிமுகப்படுத்தி¸ வாதியிடமிருந்து 1 வது எதிரி பணம் கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு ஆதரவாக தேவகோட்டையில் உள்ள ஒரு வீட்டை எழுதி கொடுத்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. எதிரி தேவகோட்டையில் உள்ள வீட்டை¸ கடனுக்கு ஆதரவாக எழுதி கொடுத்தும்¸ .சா.¸2 மற்றும் .சா..3 ஆவணங்களின் மூலம் உறுதியாகிறது. .சா..4 ஆவணமானது மேற்படி .சா.. 2 மற்றும் .சா.. 3 ஆகியவற்றில் கடனுக்கு ஆதரவாக எழுதி கொடுக்கப்பட்ட சொத்து .சா.5 க்கு பாத்தியப்பட்டது என்பதை அறித்து கொள்ளும் வகையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. .சா.5 ஆக விசாரிக்கப்பட்ட சாட்சி¸ 1 வது எதிரி தன் தங்கையின் கணவர் என்றும் 1 வது எதிரிக்கு ஆதரவாக எழுதி கொடுத்த சொத்து தனக்கு பாத்தியப்பட்டது என்றும் அதை தனது சகோதரியும் தனது தயாhரும் இருந்து பார்த்து வருகிறார்கள் என்றும்¸ எதிரிகள் தன்னுடைய உறவினர்கள் என்றும் மேற்படி வீட்டை தான் யாருக்கும் எழுதிக் கொடுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன் சகோதரியான லெட்சுமி என்பவரிடம் மேற்படி சொத்தை பார்த்துக்கொள்ளத்தான் சொல்லியுள்ளதாகவும் அதனால் அந்த சொத்தில் தனது சகோதரிக்கோ¸ அவருடைய கணவருக்கோ எந்த பாத்தியமும் இல்லை என்று சாட்சியம் அளித்துள்ளதைப் பாhக்கையில் .சா.5 க்கு பாத்தியப்பட்ட சொத்தை போலியாக தனக்கு பாத்தியப்பட்டது என்று காட்டி ஒரு ஆவணத்தை உருவாக்கி¸ 1 முதல் 4 எதிரிகள் சேர்ந்து கொண்டு¸ வாதியை மோசம் செய்யும் நோக்கத்தில் ஆரம்பம் முதலே செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

19. 1 வது எதிரியின் மனைவி .சா.5 ன் சகோதரி என்பது .சா.5 ன் சாட்சியத்தில் சொல்லப்பட்டுள்ளது. .சா.5 டைய சொத்தினை பார்த்துக்கொள்வதற்காக மட்டுமே¸ 1 வது எதிரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரியவருகிற நிலையில்¸ தன்னுடைய கணவருடையது அல்லாத ஒரு சொத்தினை ஆதரவாக காண்பித்து எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில் கையொப்பம் செய்துள்ள நிலையில் அவர் 1 வது எதிரியின் குற்றத்திற்கு முழமையாக உடந்தையாக இருந்துள்ளதும் 1 வது எதிரி தவறு செய்வது அறிந்தும்¸ 1 வது எதிரிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது புலனாகிறது. 2 முதல் 4 எதிரிகள் 1 வது எதிரியின் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதும்¸ இவ்வழக்கின் சாட்சியங்களில் இருந்து தெரிவருகிறது. எதிரிகள் தரப்பில் 1 வது எதிரி .சா.1 ற்கு எழுதிக்கொடுத்த ஆதரவு பத்திரத்தில் கண்டுள்ள சொத்து 1 வது எதிரிக்கு பாத்தியப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிரி தரப்பிலும் ஆவணங்களோ¸ சாட்சியங்களோ முன் வைக்கப்படவில்லை.

20. சாட்சிகளின் சாட்சியத்தில் இருந்து பாhர்க்கும் போது¸ ரூபாய் 4¸95¸000/- 1வது எதிரிக்கு வாதியால் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஆதரவாக பொய்யாக தனக்கு பாத்தியமில்லாத சொத்தை வாதி குணசேகரனுக்கு 1 வது எதிரி எழுதி கொடுப்பதற்கு 2 முதல் 4 எதிரிகள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. மேற்படி எதிரிகளின் செயல் வாதியை மோசடி செய்யும் நோக்கத்தோடு செய்யப்பட்டு இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. .சா.1 ன் சாட்சியத்தை உறுதிபடுத்தும் வகையில் இதர சாட்சிகளின் சாட்சியமும் அமைந்துள்ளது. இந்நிலையில் எதிரிகளின் செயலானது¸ .சா.1 குணசேகனை ஏமாற்றும் நோக்கத்தோடு பணத்தை அவரிடமிருந்து பெறுவதற்கு நேர்மையற்ற முறையில் எதிரிகள் செயல்பட்டு இருப்பதாக கருத வேண்டியுள்ளது. மேலும் 1 வது எதிரியினுடையதல்லாத சொத்தை பெற்று பொய்யுரை அடங்கிய ஆவணங்கள் மூலம் மோசடியாக எழுதப்பட்டுள்ளது புலனாகிறது. மேலும் 1 வது எதிரி செய்த நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு 2¸3¸4 எதிரிகள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிய வருகிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச. பிரிவுகள். 420¸423¸ உடண் இணைந்த 120(பி) ன் கீழ் குற்றவாளிகள் என்று இந்த பிரச்சினைக்கு இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது. இருப்பினும் எதிரிகள் வயது முதிர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க முடிவு செய்கிறது. இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச. பிரிவுகள். 420¸423¸ 120(பி) ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபித்துள்ளதால் எதிரிகள் குற்றவாளிகள் என தீர்மானித்து இத. பிரிவு 420 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 6 மாதம் மெய்காவல் சிறைதண்டனை விதித்தும்¸ அபராதம் தலா ரூ.100/-விதித்தும்¸ அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும்¸ இதச. பிரிவு 423 ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா அபராதம் ரூ.50/-விதித்தும்¸ அபராதம் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும். இதச.பிரிவு 120(பி) ன் கீழான குற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா அபராதம் ரூ.50/-விதித்தும் கட்டத்தவறினால் தலா ஒரு வாரம் மெய்காவல் சிறைத்தண்டனை விதித்தும்¸ கு. வி.மு. பிரிவு 248(2) ன் கீழ் தீர்ப்பளிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment