வாடகைக்
கட்டுப்பாட்டு நீதிமன்றம்¸
மதுரை தாலுகா¸
மதுரை
( மாவட்ட
உரிமையியல் நீதிமன்றம் மதுரை
தாலுகா¸ மதுரை)
முன்னிலை.
திரு. வீ.
ஆறுமுகம்¸
பி.எல்.¸
வாடகைக்
கட்டுப்பாட்டு நீதிபதி
( மாவட்ட
உரிமையியல் நீதிபதி¸ மதுரை
தாலுகா¸ மதுரை)
2015ம்
ஆண்டு ஜனவரி திங்கள் 09 ஆம்
நாள் - வெள்ளிக்கிழமை
வாடகைக்
கட்டுப்பாட்டு அசல் மனு எண்.
2/2011
கிருஷ்ணமூர்த்தி
மேற்படியாரின்
பிரதிநிதி அதிகார முகவர்
சுலைமான்
த/பெ S.P.
நாகூர்பிச்சை மூலமாக
... மனுதாரர் /
நிலச்சுவான்தாரர்
எதிராக
பாலாஜி
வெங்கடேசன் ... எதிர்மனுதாரர்
/ வாடகைதாரர்
வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:
இம்மனுதாரர்
தமிழ்நாடு கட்டிடங்கள்
(குத்தகை மற்றும்
வாடகை) கட்டுப்பாடு
சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு
10(2)(vii) மற்றும்
பிரிவு 14(1)ன் கீழ்
தாக்கல் செய்யப்பட்டு மனு
சொத்திலிருந்து எதிர்மனுதாரரை/வாடகைதாரரை
வெளியேற்ற உத்திரவிட கோரி
இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2). மனுதாரர்
தரப்பு மனுஉரையின் சுருக்கம்
பின்வருமாறு:
இம்மனுதாரர்
கிருஷ்ணமூர்த்தி என்பவரின்
அதிகாரம் பெற்ற முகவர் ஆவார்.
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
என்பவருக்கு மனு சொத்து
தமிழ்நாடு வீட்டு வசதி
வாரியத்தால் 1988ம்
ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதுநாள் முதல் மேற்படி
கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில்
அமைதியான சுவாதீனத்தில்
அனுபவம் செய்துகொண்டு வந்து
கடந்த 01.01.2005ம் தேதியில்
இவ்வெதிர்மனுதாரரிடம் ஏற்பட்ட
வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில்
குடியிருக்கும் நோக்கத்திற்காக
மாதம் ரூ.500/- என வாடகை
நிர்ணயம் செய்யப்பட்டு
பிரதிமாதம் 8ம்
தேதிக்குள் வாடகை செலுத்தப்பட
வேண்டும் என நிபந்தனை
விதிக்கப்பட்டது. முன்தொகையாக
ரூ.500/- பெற்றுக்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட வாடகை
ஒப்பந்தப்படி 31.12.2006ம்
தேதி வரை வாடகை ஒப்பந்த காலம்
நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது.
இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்தில் குடியேறிய
நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய
மாத வாடகையை உரிய காலத்திற்குள்
செலுத்தாமல் காலம் தாழ்த்தியே
செலுத்திக்கொண்டு வந்தார்.
வாடகை ஒப்பந்த காலம்
முடிவுற்ற பின்னர் தாவா
சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
வெளியேற கூறினார். ஆனால்
இவ்வெதிர்மனுதாரர் கால அவகாசம்
கேட்டுக்கொண்டதின் பேரில்
மார்ச் 2007ம் தேதி
வரை வாய்மொழியாக காலநீட்டிப்பு
செய்யப்பட்டது. அப்போது
மனுதாரரால் கொடுத்த முன்தொகை
ரூ.500/-ஐ இவ்வெதிர்மனுதாரருக்கு
திருப்பிக் கொடுக்கப்பட்டது.
மார்ச் 2007ம்
தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர்
கூறியபடி தாவா சொத்திலிருந்து
காலி செய்யாமல் தொடர்ந்து
குடியிருந்து கொண்டு வந்தார்.
மேற்கண்ட மார்ச்
2007ம் தேதியிலிருந்து
எவ்வித வாடகை தொகையும்
செலுத்தாமல் சட்டத்திற்கு
புறம்பாக இவ்வெதிர்மனுதாரர்
குடியிருந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் மனு
கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான
சுலைமான் என்பவருக்கு மேற்படி
கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம்
தேதியில் பொதுஅதிகார பத்திரம்
ஒன்றை எழுதிக்கொடுத்தார்.
மேற்கண்ட பத்திரத்தின்படி
தாவா சொத்தை பொறுத்து அனைத்து
நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி
சார்பாக மேற்கொள்ள அதிகாரம்
கொடுக்கப்பட்டது. மேற்கொண்டு
இம்மனுதாரர் எதிர்மனுதாரரிடம்
தாவா மனு கட்டிடத்தை காலி
செய்ய கோரியும்¸ காலி
செய்யாமல் இருந்து கொண்டுவந்து
எவ்வித வாடகை பணமும் செலுத்தாமல்
குடியிருந்துகொண்டு வந்தார்.
மேலும் மனு கட்டிடம்
அமைந்த இடத்தின் மொத்த
விஸ்தீரணம் 5 ½ சென்ட்
என்றும் அதில் 350 சதுரஅடி
பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு
விடப்பட்டுள்ள மனு கட்டிடம்
உள்ளது. இம்மனுதாரர்
தமிழ்நாடு கலை மற்றும்
பண்பாட்டுத் துறையிலிருந்து
ஓய்வு பெற்றிருந்ததால்
மீதமுள்ள இடத்தில் வைத்து
ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு
கலை பண்பாடு மற்றும் நடனகலை
பயிற்சியும் அளித்து வந்தார்.
மேற்கண்ட கட்டிடத்தை
சுற்றி காம்பவுண்ட் சுவர்
அமைத்து அதில் கார் செட்டும்
மேடைகளும் அமைத்து ஆர்வம்
உள்ள மாணாக்கர்களுக்கு
வகுப்புகளை நடத்தி வந்தார்.
இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்தில் குடியிருந்து
கொண்டு வந்து வாடகை கொடுக்காமல்
அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும்
மற்றும் ஆசிரியர்களுக்கும்
வீண் தொந்தரவுகளை கொடுத்து
வந்தார். மேற்கொண்டு
இவ்வெதிர்மனுதாரரை தாவா
கட்டிடத்திலிருந்து காலிசெய்ய
கோரிய போது அடியாட்களை
வைத்துக்கொண்டு இம்மனுதாரரை
மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக
கூடல்புதூர் காவல்நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டது.
மேற்கண்ட எதிர்மனுதாரர்
தாவா சொத்துக்கு உண்டான மாத
வாடகையையும் வாடகை பாக்கியையும்
கொடுக்காமல் தொடர்ந்து
சட்டத்திற்கு புறம்பாக
குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து
வருவதால் மனு கட்டிடத்திலிருந்து
இவ்வெதிர்மனுதாரரை வெளியேற
வேண்டுமென உத்திரவிடகோரி
இம்மனுதாரர் கோரியுள்ளார்.
3). எதிர்மனுதாரர்
தரப்பு எதிருரையின் சுருக்கம்
பின்வருமாறு:
தாவா
சொத்தானது இவ்வெதிர்மனுதாரரின்
முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி
என்பவருக்கு தமிழ்நாடு
வீட்டுவசதி வாரியத்தால்
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
என்பவரிடம் கடந்த 01.01.2005ம்
தேதியில் தாவா கட்டிடத்தில்
குடியிருப்பு நோக்கத்திற்காக
வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
அதன்படி மாத வாடகை
ரூ.5000/- என நிர்ணயிக்கப்பட்டு
முன்தொகையாக ரூ.5000/- மேற்படி
கிருஷ்ணமூர்த்திக்கு
கொடுக்கப்பட்டது. வாடகை
ஒப்பந்த காலம் 31.12.2006 என
நிர்ணயிக்கப்பட்டது. தாவா
கட்டிடத்திற்குரிய மின்கட்டணம்
குடிநீர் கட்டணம் ஆகியவற்றை
எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு
வரவேண்டும் என கூறப்பட்டது.
இவ்வெதிர்மனுதாரர்
தாவா சொத்துக்குண்டான மாத
வாடகையை தொடர்ந்து செலுத்திக்கொண்டு
வருகிறார். ஆனால்
அதற்கு உரிய ரசீதுகள் எதுவும்
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
இவ்வெதிர்மனுதாரர்வசம்
கொடுக்கவில்லை. மனுதாரர்
மனுவில் கூறியதுபோல் மனு
கட்டிடத்திற்கு அருகில்
எவ்வித கலை மற்றும் பண்பாட்டு
துறை வகுப்புகள் எதுவும்
நடைபெறவிலவ்லை. இவ்வெதிர்மனுதாரர்
மேற்படி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து
பொது அதிகாரம் பெற்றுள்ளது
இந்த எதிர்மனுதாரரை எவ்விதத்திலும்
கட்டுப்படுத்தாது. மேற்படி
கிருஷ்ணமூர்த்திக்கு தாவா
சொத்தின் உண்மையான உரிமையாளர்
அல்ல என்பதால் அதனைப் பொறுத்து
பொது அதிகாரம் கொடுக்க எவ்வித
உரிமையும் தகுதியும் இல்லை.
ஆகவே பவர் பத்திரத்தின்
அடிப்படையில் இம்மனுதாரர்
இம்மனுவை தாக்கல் செய்து
அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை
தாவா சொத்திலிருந்து வெளியேற்ற
கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை.
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
மனுக்கட்டிடத்தை இந்த
எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக
கூறியதின்பேரில் ரூ.1 ½
லட்சம் கிரைய முன்தொகையாக
மனுதாரர்வசம் கொடுக்கப்பட்டது.
அதற்குரிய ஆவணத்தை
எழுதிக்கேட்டபோது மனுக்கட்டிடமானது
எதிர்மனுதாரர் வசம் உள்ளதால்
தான் எவ்வித மறுப்பும் சொல்ல
போவதில்லை என மனுதாரர் உறுதிகூறி
கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில்
தாவா சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு
கிரையம் செய்து கொடுப்பதாக
உறுதி அளித்ததை நம்பியிருந்தார்.
ஆனால் இம்மனுதாரர்
மேற்கண்ட உண்மைகளை மறைத்து
மனு கட்டிடத்திற்குரிய வாடகையை
இந்த எதிர்மனுதாரர்¸
வேண்டுமென்றே வேண்டும்
என்றே செலுத்தாமல் இருந்து
வருகிறார் என்ற பொய்யான
சங்கதிகளை கொண்டு இவ்வெதிர்மனுதாரரை
வெளியேற்ற இம்மனுவை தாக்கல்
செய்தள்ளார். எனவே
மனுதாரரின் மனு செலவு தொகையுடன்
தள்ளுபடி செய்யப்படவேண்டும்
என எதிருரையில் கூறப்பட்டது.
4). இந்த
மனுவில் ஆய்வுக்குரிய பிரச்சினை
யாதெனில்:
மனுதாரர்
தரப்பில் தாக்கல் செய்த மனு
அனுமதிக்கத்தக்கதா என்பதே
ஆகும்.
5). இந்த
மனுவில் மனுதாரர்/நிலச்சுவான்தாரர்
தரப்பில் மனுதாரரின் அதிகாரம்
பெற்ற முகவரான சுலைமான்
என்பவர் ம.சா.1ஆக
விசாரிக்கப்பட்டு ம.சா.ஆ.1
முதல் 7 வரையான
ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.
எதிர்மனுதாரர்/வாடகைதாரர்தரப்பில்
எதிர்மனுதாரர் எ.ம.சா.1ஆகவும்¸
E. இளமதி என்பவர்
எ.ம.சா.2ஆகவும்¸
G. ராஜசேகர் என்பவர்
எ.ம.சா.3ஆகவும்¸
G.மீனாட்சிசுந்தரம்
என்பவர் எ.ம.சா.4ஆகவும்
விசாரிக்கப்பட்டு எ..சா.ஆ.1
முதல் 5 வரையான
ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.
6. மனுக்கட்டிடமானது
மனுவின்படி மதுரை மாவட்டம்
ஆணையூர் தமிழ்நாடு வீட்டு
வசதிவாரியம் காலனி¸ கதவு
எண். MIG
122 ஆகும்.
7. பிரச்சினை
1:
மனுதாரர்
தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனு அனுமதிக்கத்தக்கதா?
இருதரப்பு வாதங்கள்
கேட்கப்பட்டது. ஆவணங்கள்
பரிசீலிக்கப்பட்டது.
8. மனுதாரர்தரப்பு
வாதுரையில் இம்மனுதாரர்
கிருஷ்ணமூர்த்தி என்பவரின்
அதிகாரம் பெற்ற முகவர் என்றும்
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
என்பவருக்கு மனு சொத்து
தமிழ்நாடு வீட்டு வசதி
வாரியத்தால் 1988ம்
ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது
என்றும் அதுநாள் முதல் மேற்படி
கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில்
அமைதியான சுவாதீனத்தில்
இருந்து அனுபவம் செய்துகொண்டு
வந்து கடந்த 01.01.2005ம்
தேதியில் இவ்வெதிர்மனுதாரரிடம்
ஏற்பட்ட வாடகை ஒப்பந்தத்தின்
அடிப்படையில் குடியிருக்கும்
நோக்கத்திற்காக மாதம் ரூ.500/-
என வாடகை நிர்ணயம்
செய்யப்பட்டு பிரதிமாதம்
8ம் தேதிக்குள்
வாடகை செலுத்தப்பட வேண்டும்
என நிபந்தனை விதிக்கப்பட்டது
என்றும் முன்தொகையாக ரூ.500/-
பெற்றுக்கொள்ளப்பட்டது
என்றும் மேற்கண்ட வாடகை
ஒப்பந்தப்படி 31.12.2006ம்
தேதி வரை வாடகை ஒப்பந்த காலம்
நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது
என்றும் இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்தில் குடியேறிய
நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய
வாடகையை உரிய காலத்திற்குள்
செலுத்தாமல் காலம் தாழ்த்தியே
செலுத்திக்கொண்டு வந்தார்
என்றும் வாடகை ஒப்பந்த காலம்
முடிவுற்ற பின்னர் தாவா
சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
வெளியேற கூறினார் என்றும்
ஆனால் இவ்வெதிர்மனுதாரர்
கால அவகாசம் கேட்டுக்கொண்டதின்
பேரில் மார்ச் 2007ம்
தேதி வரை காலநீட்டிப்பு
வாய்மொழியாக செய்யப்பட்டது
என்றும் இவ்வெதிர்மனுதாரர்
கொடுத்த முன்தொகை ரூ.500/-ஐ
திருப்பிக் கொடுக்கப்பட்டது
என்றும் மார்ச் 2007ம்
தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர்
கூறியபடி தாவா சொத்திலிருந்து
காலி செய்யாமல் தொடர்ந்து
குடியிருந்து கொண்டு வந்தார்
என்றும் ஆனால் மேற்கண்ட மார்ச்
2007ம் தேதியிலிருந்து
எவ்வித வாடகை தொகையும்
செலுத்தாமல் சட்டத்திற்கு
புறம்பாக இவ்வெதிர்மனுதாரர்
குடியிருந்து கொண்டு வந்தார்
என்றும் இந்நிலையில் மனு
கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான
சுலைமான் என்பவருக்கு மேற்படி
கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம்
தேதியில் பொதுஅதிகார பத்திரம்
ஒன்றை எழுதிக்கொடுத்தார்
என்றும் மேற்கண்ட பத்திரத்தின்படி
தாவா சொத்தை பொறுத்து அனைத்து
நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி
சார்பாக மேற்கொள்ள அதிகாரம்
கொடுக்கப்பட்டது என்றும்
மேற்கொண்டு இம்மனுதாரர்
எதிர்மனுதாரரிடம் தாவா மனு
கட்டிடத்தை காலி செய்ய கோரியும்
காலி செய்யாமல் இருந்து
கொண்டுவந்து எவ்வித வாடகை
பணமும் செலுத்தாமல்
குடியிருந்துகொண்டு வந்தார்
என்றும் மேலும் மனு கட்டிடம்
அமைந்துள்ள இடத்தின் மொத்த
விஸ்தீரணம் 5 ½ சென்ட்
என்றும் அதில் 350 சதுரஅடி
பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு
விடப்பட்டுள்ள மனுகட்டிடம்
உள்ளது என்றும் மீதமுள்ள
பகுதியில் இம்மனுதாரர்
தமிழ்நாடு கலை மற்றும்
பண்பாட்டுத் துறையிலிருந்து
ஓய்வு பெற்றிருந்ததால் ஆர்வம்
உள்ள மாணவர்களுக்கு கலை
பண்பாடு மற்றும் நடனகலை
பயிற்சியும் அளித்து வந்தார்
என்றும் மேற்கண்ட கட்டிடத்தை
சுற்றி காம்பவுண்ட் சுவர்
அமைத்து அதில் கார் செட்டும்
மேடைகளும் அமைத்து ஆர்வம்
உள்ள மாணாக்கர்களுக்கு
வகுப்புகளை நடத்தி வந்தார்
என்றும் இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்தில் குடியிருந்து
கொண்டு வந்து வாடகை கொடுக்காமல்
அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் வீண்
தொந்தரவுகளை கொடுத்து வந்தார்
என்றும் மேற்கொண்டு
இவ்வெதிர்மனுதாரர் தாவா
கட்டிடத்திலிருந்து காலிசெய்ய
கோரிய போது அடியாட்களை
வைத்துக்கொண்டு இம்மனுதாரரை
மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக
கூடல்புதூர் காவல்நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டது
என்றும் மேற்கொண்ட எதிர்மனுதாரர்
தாவா சொத்துக்கு உண்டான எவ்வித
வாடகையையும் வாடகை பாக்கியையும்
கொடுக்காமல் தொடர்ந்து
சட்டத்திற்கு புறம்பாக
குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து
வருவதால் மனு கட்டிடத்திலிருந்து
இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற
கோரி தாக்கல் செய்துள்ள
இம்மனுவை அனுமதிக்க வேண்டும்
எனவும் வாதிடப்பட்டது.
9. எதிர்மனுதாரர்தரப்பு
வாதுரையில் தாவா சொத்தானது
இவ்வெதிர்மனுதாரரின் முதல்வாரன
கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு
தமிழ்நாடு வீட்டுவசதி
வாரியத்தால் ஒதுக்கீடு
செய்யப்பட்டதுஎன்றும் மேற்படி
கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம்
கடந்த 01.01.2005ம் தேதியில்
தாவா கட்டிடத்தில் குடியிருப்பு
நோக்கத்திற்காக வாடகை ஒப்பந்தம்
செய்துகொள்ளப்பட்டது என்றும்
அதன்படி மாத வாடகை ரூ.500/-
என நிர்ணயிக்கப்பட்டு
முன்தொகையாக ரூ. 5¸000/- மேற்படி
கிருஷ்ணமூர்த்திக்கு
கொடுக்கப்பட்டது என்றும்
வாடகை ஒப்பந்த காலம் 31.12.2006
என நிர்ணயிக்கப்பட்டது
என்றும் தாவா கட்டிடத்திற்குரிய
மின்கட்டணம் குடிநீர் கட்டணம்
ஆகியவற்றை எதிர்மனுதாரரே
செலுத்திக்கொண்டு வரவேண்டும்
என கூறப்பட்டது என்றும்
இவ்வெதிர்மனுதாரர் தாவா
சொத்துக்குண்டான வாடகையை
முறையாக செலுத்திக்கொண்டு
வருவதாகவும் ஆனால் அதற்கு
உரிய பணவரவு ரசீதுகள் எதுவும்
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
இவ்வெதிர்மனுதாரர்வசம்
கொடுக்கவில்லை என்றும்
மனுதாரர் மனுவில் கூறியதுபோல்
மனு கட்டிடத்திற்கு அருகில்
எவ்வித கலை மற்றும் பண்பாட்டு
துறை வகுப்புகள் எதுவும்
நடைபெறவிலவ்லை என்றும்
இவ்வெதிர்மனுதாரர் மேற்படி
கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து
பொது அதிகாரம் பெற்றுள்ளது
இந்த எதிர்மனுதாரரை எவ்விதத்திலும்
கட்டுப்படுத்தாது என்றும்
மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு
மனுச் சொத்தின் உண்மையான
உரிமையாளர் அல்ல என்றால்
மனுக்கட்டிடத்தை பொறுத்து
பொது அதிகாரம் எழுதிக்கொடுக்க
எவ்வித உரிமையும் தகுதியும்
இல்லை என்றும் ஆகவே பவர்
பத்திர அடிப்படையில் இம்மனுதாரர்
இம்மனுவை தாக்கல் செய்து
அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை
தாவா சொத்திலிருந்து வெளியேற்ற
கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை
என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி
என்பவர் மனுக்கட்டிடத்தை
இந்த எதிர்மனுதாரருக்கு
விற்கபோவதாக கூறியதின்பேரில்
ரூ.1 ½ லட்சம் கிரைய
முன்தொகையாக மனுதாரர்வசம்
கொடுக்கபப்ட்டது என்றும்
மனுக்கட்டிடமானது எதிர்மனுதாரர்
வசம் உள்ளதால் எவ்வித ஆவணமும்
எழுதிக்கொள்ள தேவையில்லை
என மனுதாரர் உறுதிகூறி
கிருஷ்ணமூர்த்தி வந்தவுடன்
அவர் முன்னிலையில் தாவா
சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு
கிரையம் செய்து கொடுப்பதாக
உறுதி அளித்ததை நம்பியிருந்ததாகவும்¸
ஆனால் இம்மனுதாரர்
மேற்கண்ட உண்மைகளை மறைத்து
மனு கட்டிடத்திற்குரிய வாடகையை
இந்த எதிர்மனுதாரர் வேண்டுமென்றே
செலுத்தாமல் இருந்து வருகிறார்
என பொய்யான சங்கதிகளை கொண்டு
இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற
வேண்டுமென இம்மனுவை தாக்கல்
செய்துள்ளார் என்றும் ஆகவே
மனுதாரரின் மனுவை செலவு
தொகையுடன் தள்ளுபடி செய்யவேண்டும்
எனவும் வாதிடப்பட்டது.
10. மனுதாரர்தரப்பில்
மனுதாரர் சுலைமான் ம.சா.1ஆக
விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஆவர் தன்னுடைய
விசாரணையின்போது மனு கட்டிடத்தை
பொறுத்து கிருஷ்ணமூர்த்தி
என்பவர் இம்மனுதாரருக்கு
எழுதிக்கொடுத்த பதிவு
செய்யப்பட்ட பொது அதிகார
பத்திரம் ம.சா.ஆ.1
என்றும் மனு சொத்தை
பொறுத்து மனுதாரரின் முதல்வர்
கிருஷ்ணமூர்த்தி பெயரில்
வழங்கப்பட்ட குடிநீர் கட்டண
ரசீது ம.சா.ஆ.2.
என்றும் இம்மனுதாரர்
காவல்துறை அதிகாரிகளுக்கு
அனுப்பிய புகாரின் நகல்
ம.சா.ஆ.3.
என்றும் மனு கட்டிடத்தை
பொறுத்து மனுதாரரின் முதல்வர்
கிருஷ்ணமூர்த்தி பெயரில்
ஏற்பட்ட சொத்து வரி ரசீது
ம.சா.ஆ.4
மற்றும் 6 என்றும்
மனு கட்டிடத்தை வாங்குவதற்கு
அரசு துறையிடமிருந்து மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
பெற்ற மதுரை மாவட்ட ஆட்சியரின்
நடவடிக்கைகள் ம.சா.ஆ.5
என்றும் மனு கட்டிடத்தை
பொறுத்து மின்இணைப்பு எண்ணை
மாற்றம் செய்துகொள்ள மனுதாரரின்
முதல்வருக்கு தமிழ்நாடு
வீட்டு வசதி கழக அதிகாரி
கொடுத்த சான்றிதழ் ம.சா.ஆ.7
என்றும் குறியீடு
செய்யப்பட்டுள்ளது.
11. எதிர்மனுதாரர்தரப்பில்
இந்த எதிர்மனுதாரர் /வாடகைதாரர்
எ.ம.சா.1ஆக
விசாரிக்கபப்ட்டுள்ளார்.
மனு கட்டிடத்தை பொறுத்து
உதவி பொறியாளர் தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியம் என்பவரின்
பெயரில் ஏற்பட்ட மின் இணைப்பு
கட்டண ரசீது எ.ம.சா.ஆ.1ஆகவும்
மனு கட்டிடத்திற்கு மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
பெயரில் தமிழ்நாடு வீட்டு
வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட
கடிதம் எ.ம.சா.ஆ.2
என்றும் குறியீடு
செய்யப்பட்டுள்ளது. E.இளமதி
என்பவர் எ.ம.சா.ஆ.2ஆக
விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய
விசாரணையின்போது தாவா சொத்தில்
புனரமைப்பு மற்றும் கட்டுமான
பணிகளை செய்ததாகவும் அதற்குரிய
உத்தேச மதிப்பு சான்றிதழ்
எ..சா.ஆ.3
என்றும் கட்டிடத்தில்
பணி செய்தமைக்காக தான்பெற்ற
ரொக்க ரசீது எ.ம.சா.ஆ.4
என்றும் குறியீடு
செய்யப்பட்டுள்ளது.
எதிர்மனுதாரர்தரப்பில்
G.ராஜசேகரன் என்பவர்
எம.சா.3ஆக
விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய விசாரணையில்
மனு கட்டிடத்தில் இவ்வெதிர்மனுதாரர்
வாடகைக்காக குடியிருந்து
கொண்டு வருவதாகவும் அவ்வாறு
குடியிருந்து கொண்டு வந்த
போது மனு கட்டிடத்தை
எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக
கூறி முன்தொகையாக ரூ.1¸50¸000/-
மனுதாரர் பெற்றுக்கொண்டதாகவும்
மேற்கண்ட சங்கதிகள் யாவும்
தனக்கு தெரியும் என்றும்
சாட்சியமளித்துள்ளார்.
எ.ம.சா.4ஆக
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை
சேர்ந்த மீனாட்சிசுந்தரம்
என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய
விசாரணையின்போது மனுதாரரின்
முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி
என்பவருக்கு மனு கட்டிடத்தை
ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான
உத்திரவின் நகலினை எ.ம.சா.ஆ.5ஆக
தாக்கல் செய்து குறியீடு
செய்துள்ளார்.
12. மனு
கட்டிடமானது ஆணையூர் தமிழ்நாடு
வீட்டு வசதி வாரிய காலனியில்
உள்ள M.22 என்ற கட்டிடம்
ஆகும். மேற்கண்ட
கட்டிடம் தமிழ்நாடு வீட்டு
வசதி வாரியத்தால் கட்டப்பட்டு
இம்மனுதாரரின் முதல்வாரன
கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு
1988ம் ஆண்டில் ஒதுக்கீடு
செய்யப்பட்டது என்றும் மனு
கட்டிடத்தில் இந்த எதிர்மனுதாரர்
கடந்த 1.1.2005ம் தேதியில்
ஏற்பட்ட வாடகை ஒப்பந்தம்
மூலம் குடியிருப்பு நோக்கத்திற்கு
வாடகைதாரராக இருந்து குடியிருந்து
கொண்டு வருகிறார் என்றும்
இருதரப்பிலும ஒப்புக்கொள்ளப்பட்டது.
13. இம்மனுதாரர்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
கட்டிட உரிமையாளர் என்பதும்
இந்த எதிர்மனுதாரர் பாலாஜி
வெங்கடேசன் கட்டிடத்தின்
வாடகைதாரர் என்பதும் இருதரப்பிலும்
ஒப்புக்கொள்ளப்பட்டது.
14. இந்த
எதிர்மனுதாரர் கடந்த 01.01.2005ல்
ஏற்பட்ட வாடகை ஒப்பந்தப்படி
வாடகை ஒப்பந்த காலமானது
31.12.2006 தேதியுடன்
முடிவு பெற்றது என்பதும்
ஒப்புக்கொள்ளப்பட்டது.
15. 2007ம்
வருடம் மார்ச் மாதத்திலிருந்து
இதுநாள்வரை இந்த எதிர்மனுதாரர்
தாவா கட்டிடத்திற்குரிய
வாடகையை மனுதாரருக்கு
செலுத்திக்கொண்டு வருகிறாரா
என்பதை நீதிமுறையில்
தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.
16. மனுதாரர்தரப்பில்
மனுதாரர் ம.சா.1ஆக
விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய விசாரணையில்
01.01.2005ம் தேதியில்
வாடகை ஒப்பந்தப்படி இந்த
எதிர்மனுதாரர் பிரதிஆங்கில
மாதம் 8ம் தேதிக்குள்
ரூ.500/- செலுத்தவேண்டும்¸
மின்கட்டணம் குடிநீர்
கட்டணம் செலுத்தவேண்டும்
என்றும் தன்னுடைய முதல்வர்
கிருஷ்ணமூர்த்தியிடம்
முன்பணமாக ரூ.500/- செலுத்தப்பட்டது
என ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் எதிர்மனுதாரர்
வாடகையை சரிவர செலுத்தவில்லை
என்றும் வேண்டுமென்றே வாடகையை
இழுத்தடித்து தான் ஒவ்வொரு
மாதமும் கட்டிவந்தார் என்றும்
தண்ணீர் வரியையும் சொத்து
வரியையும் ஒப்பந்தப்படி
இவ்எதிர்மனுதாரர் செலுத்தவில்லை
என்றும் இம்மனுதாரரே தனது
முதல்வர் சார்பாக செலுத்திவந்தார்
என்றும் அதற்குண்டான ஆவணங்கள்
ம.சா.ஆ.2¸4¸6
என்றும் வாடகை ஒப்பந்தம்
31.12.2006 முடிந்த பிறகு
இந்த எதிர்மனுதாரர் மனு
கட்டிடத்திற்குண்டான வாடகையை
மனுதாரரிடமோ அல்லது அவரது
முதல்வரிடமோ கொடுக்கவில்லை
என்றும் தாவா சொத்துக்கு
உண்டான முன்பணத்தை மனுதாரரின்
முதல்வர் எதிர்மனுதாரரிடம்
திருப்பிக்கொடுத்துவிட்டார்
என்றும் கடந்த மார்ச் 2007ம்
தேதியில் இந்த எதிர்மனுதாரர்
தாவா சொத்திலிருந்து காலிசெய்வதாக
ஒப்புக்கொண்ட பின்பும்
காலிசெய்யவில்லை என்றும்
வாடகை கேட்கும்போதெல்லாம்
எதிர்மனுதாரர் வேண்டுமென்றே
வாடகை தர மறுத்தும் தவிர்த்தும்
வந்தார் என்றும் எதிர்மனுதாரர்
மார்ச் 2007ம்
தேதியிலிருந்து இன்று வரை
வாடகை எதுவும் மனுதாரரிடமோ
அல்லது மனுதாரரின் முதல்வரிடமோ
செலுத்தவில்லை என்றும் இந்த
எதிர்மனுதாரர் கூறியது போல்
மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு
விற்க வேண்டி எவ்வித முன்கிரைய
தொகையோ ஒப்பந்தமோ செய்துகொள்ளவில்லை
என்றும் எதிர்மனுதாரர்
அடியாட்களை வைத்துக்கொண்டு
கட்டிடத்திலிருந்து காலி
செய்ய சொன்னால் மனுதாரரை
காலி செய்துவிடுவோம் என்று
மிரட்டியதாகவும் மார்ச் 2007
முதல் வாடகையை தராமல்
கட்டிடத்திலிருந்து காலியும்
செய்யாமல் சட்டத்திற்கு
புறம்பாக குடியிருந்துகொண்டு
வருகிறார் என சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
17. ம.சா.1.
தன்னுடைய குறுக்கு
விசாரணையின்போது ம.சா.1.
தன்னுடைய முதல்விசாரணை
வாக்குமூலத்தில் கூறியபடி
இவ்எதிர்மனுதாரர்
மனுக்கட்டிடத்திற்குரிய
வாடகை கொடுக்காத சங்கதிகள்
குறித்தோ சட்டத்திற்கு
புறம்பாக மனு கட்டிடத்தில்
குடியிருந்து கொண்டு வருகிறார்
என்பது குறித்தோ அடியாட்களை
வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியது
குறித்தோ மனு கட்டிடத்தை
பொறுத்து எதிர்மனுதாரர்
பெயரில் ஏற்பட்டதாக சொன்ன
கிரைய முன்தொகை குறித்தோ
எவ்வித ஆட்சேபனை கேள்விகளும்
எதிர்மனுதாரர்தரப்பில்
எழுப்பப்படவில்லை.
18. மனுதாரர்தரப்பு
ம.சா.ஆ.2
ஆவணமானது மனு
கட்டிடத்திற்குண்டான குடிநீர்
கட்டணமாக மனுதாரரின் முதல்வரின்
பெயரில் செலுத்தப்பட்டு
மனுதாரரின் மூலம் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு கட்டிடத்திற்குண்டான
சொத்து வரி ரசீது ம.சா.ஆ.4.
.மற்றும் 6 ஆக
குறியீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மனுதாரர்¸
எதிர்மனுதாரர்தரப்பில்
மனு கட்டிடத்திற்குண்டான
மனுக் கட்டிடத்திற்குண்டான
தண்ணீர் கட்டணம்¸ சொத்துவரி
மற்றும் மின்சார கட்டணம்
ஆகியவற்றையும் எதிர்மனுதாரரே
செலுத்திக்கொண்டு வரவேண்டும்
என ஒப்புக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தன்னுடைய
மனுவிலும் முதல்விசாரணையின்போது
எதிர்மனுதாரர் தாவா கட்டிடத்தில்
குடியிருந்து கொண்டு வந்து
மார்ச் 2007ம் தேதி
முதல் மனு கட்டிடத்திற்குண்டான
வாடகை செலுத்தவில்லை என்றும்
தண்ணீர் மற்றும் சொத்து
வரிகளும் செலுத்தப்படவில்லை
என்றும் கூறியுள்ளார்.
அதை நிரூபணம் செய்யும்
வகையில் மனுதாரர்தரப்பில்
ம.சா.ஆ.2¸
4 மற்றும் 6 ஆவணங்களாக
குடிநீர்¸ சொத்து
வரி இரசீதுகள் தாக்கல்
செய்யப்பட்டது. ம.சா.ஆ.2¸4¸
6 ஆவணங்களின்படி மனு
கட்டிடத்திற்குண்டான வாடகை
ஒப்பந்தப்படி எதிர்மனுதாரர்
தண்ணீர் மற்றும் சொத்து வரிகள்
செலுத்திக்கொண்டு வரவில்லை
என்பதும் இவ்வெதிர்மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
என்பவர் தான் செலுத்திக்கொண்டு
வந்தார் என்பதும் நிரூபணம்
செய்யப்பட்டுள்ளது.
19. எதிர்மனுதாரர்தரப்பு
விசாரணையின்போது தாவா
கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தம்
முடிவதற்கு முன்பே மனு
கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு
விற்பனை செய்யபோவதாக
உறுதிக்கொடுத்ததன் பேரில்
தாவா சொத்துக்குண்டான கிரையதொகை
ரூ. 2லட்சம் என
நிர்ணயிக்கப்பட்டு ரூ.
1¸50¸000/- முன்தொகையாக
இந்த எதிர்மனுதாரரால் மனுதாரர்
சுலைமானுக்கு கொடுத்ததாகவும்
ஆனால் அதற்குரிய ஆவணங்கள்
எதுவும் எழுதி வாங்கவில்லை
என்றும் கூறியுள்ளார்.
எ.ம.சா.1.
தன்னுடைய குறுக்கு
விசாரணையில் 01.01.2005ம்
தேதியில் கிருஷ்ணமூர்த்தி
என்பவர் வீட்டில் வாடகைக்கு
குடியிருக்க வந்ததாகவும்
வாடகை மாதம் ரூ.500/- கொடுத்ததாகவும்
தாவா கட்டிடம் தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியத்தால்
கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டது என்றும்
கிருஷ்ணமூர்த்தியை தவிர வேறு
யாரும் தன்னிடம் வாடகை
கேட்கவில்லை என்றால் சுலைமான்
என்பவர் வாடகை கேட்டார்
என்றும் அவரிடம் கொடுக்கவில்லை
என்றும் கடைசியாக யாரிடம்
எவ்வளவு வாடகை கொடுக்கப்பட்டது
என்று ஞாபகம் இல்லை என்றும்
ரூ.2லட்சம் கிரையம்
பேசியதற்கு ஒப்பந்தம் எதுவும்
எழுதிக்கொள்ளவில்லை என்றும்
மேற்படி கிரையம் செய்து
கொடுக்காததால் அதனை நிறைவேற்ற
ஏற்றதை ஆற்றுக பரிகாரம் கோரி
வழக்கு எதுவும் தாக்கல்
செய்யவில்லை என்றும் தாவா
சொத்தை பொறுத்து வாடகை
செலுத்தியதற்கான ரசீது எதுவும்
வாங்கவில்லை என்றும் வாடகை
கொடுத்ததற்கான அத்தாட்சி
கூட வாங்கவில்லை என்றும்
தற்போது தாவா வீட்டினை பொறுத்து
கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு
தமிழ்நாடு வீட்டு வசதி
வாரியத்தால் கிரையம்
எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது
என்றும் மனுதாரர் சுலைமான்
மேற்படி கிருஷ்ணமூர்த்தியின்
பவர் ஏஜன்டாக உள்ளார் என்றும்
மனு கட்டிடத்தில் குடியிருந்துகொண்டு
வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
20. மேலும்
எ.ம.சா.1
தன்னுடைய குறுக்கு
விசாரணையில் தாவா கட்டிடத்தை
புனரமைப்பு செய்வதற்கு கட்டிட
உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடமோ
அவரது அதிகாரம் பெற்ற முகவர்
சுலைமானிடமோ எவ்வித ஒப்புதலும்
பெறவில்லை என்றும் இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்திற்கு குடிவந்த
நாள்முதல் மனுதாரருக்கு
எவ்வித வாடகையும் தரவில்லை
என்றால் சரிதான் என்றும்
குடிநீர் கட்டணம் செலுத்திக்கொண்டு
வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
21. மனுதாரர்தரப்பில்
மனு கட்டிடத்திற்குரிய வாடகை
தொகையை இந்த எதிர்மனுதாரர்
கடந்த மார்ச் 2007ம்
தேதி முதல் மனுதாரருக்கோ
அல்லது மனுதாரரின் முதல்வரான
கிருஷ்ணமூர்த்திக்கோ கொடுக்காமல்
வேண்டுமென்றே காலதாமதம்
செய்துகொண்டு வந்து சட்டத்திற்கு
புறம்பாக மனு கட்டிடத்தில்
குடியிருந்து வருகிறார்
என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
வாடகைதாரர்தரப்பு
விசாரணையிலும் 31.12.2006ம்
தேதியில் மனுதாரர் வாடகை
பணம் கேட்டும் தான் கொடுக்கவில்லை
என்றும் கடைசியாக எப்போது
வாடகை கொடுத்தேன் என்று ஞாபகம்
இல்லை என்றும் வாடகை கொடுத்தமைக்கான
அத்தாட்சி எதுவும் தான்
வாங்கவில்லை என்றும் மனு
கட்டிடத்திற்கு வாடகைக்கு
வந்த நாள்முதல் இந்த இம்மனுதாரர்
சுலைமான் வசம் எவ்வித வாடகையும்
தரவில்லை என்றும் மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு
கடைசியாக எந்த வருடம் வாடகை
கொடுத்தேன் என்று ஞாபகம்
இல்லை என்றும் சாட்சியமளித்துள்ளார்.
22. மனு
கட்டிடத்தை பொறுத்து
இவ்வெதிர்மனுதாரர் வாடகை
ஒப்பந்த கெடு 31.12.2006ம்
தேதிக்கு பின்னரும் காலி
செய்யாமலும் அதனை தொடர்ந்து
தற்போது வரை இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடத்தில் குடியிருந்து
கொண்டு அனுபவம் செய்துகொண்டு
வருகிறார் என்பதும்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
23. அதே
சமயத்தில் மார்ச் 2007ம்
தேதி முதல் மனு கட்டிடத்திற்குரிய
வாடகை தொகையையோ அல்லது வாடகை
பாக்கியையோ இம்மனுதாரரிடமோ
அல்லது மனுதாரரின் முதல்வரான
கிருஷ்ணமூர்த்தியிடமோ
கொடுக்கவில்லை என்பது எ.ம.சா.1
வாடகைதாரர்தரப்பு
சாட்சிய மூலம் தெரியவருகிறது.
24. இந்த
எதிர்மனுதாரர் தன்னுடைய
எதிருரையில் மனு கட்டிடமானது
தமிழ்நாடு வீட்டு வசதி
வாரியத்தால் மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டது
என்றும் ஆனால் மனுதாரர்
கிருஷ்ணமூர்த்தி பெயரில்
அப்போது மனு கட்டிடத்தை
பொறுத்து கிரைய பத்திரம்
எதுவும் ஏற்படவில்லை என்றும்
தற்போது 2014ம் ஆண்டில்
தான் மனு கட்டிடத்தை பொறுத்து
கிரைய பத்திரம் இம்மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
பெயரில் ஏற்பட்டது. ஆகவே
14.09.2009ம் தேதியில்
இம்மனுதாரர் பெயருக்கு மனு
கட்டிடத்தை பொறுத்து பொது
அதிகார பத்திரம் எழுதி
பதிவுசெய்து கொடுக்கப்பட்டபோது
மனுகட்டிடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி
முழுமையான உரிமையாளர் அல்ல
என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி
தனக்கு உரிமையில்லாத மனு
கட்டிடத்தை பொறுத்து மனுதாரர்
பெயருக்கு எழுதிக்கொடுத்த
பொது அதிகார பத்திரம் மூலம்
இம்மனுதாரருக்கு எவ்வித
உரிமையும் மனு கட்டிடத்தில்
எழவில்லை என்றும் ஆகவே
இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற
மனுத்தாக்கல் செய்ய கோருவதற்கு
எவ்வித உரிமையும் தகுதியும்
இல்லை என வாதிடப்பட்டது.
25. அந்தவகையில்
மனுதாரர்தரப்பில் ம.சா.1.
தன்னுடைய விசாரணையின்போது
மனு கட்டிடமானது 1988ம்
ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி
என்பவர் பெயருக்கு தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியத்தில்
ஒதுக்கீடு செய்யப்பட்டது
என்றும் கடந்த 14.09.2009ம்
தேதியில் மனு கட்டிடத்தை
பொறுத்து அனைத்து சட்ட
நடவடிக்கையும் விற்பனை மற்றும்
அனைத்து உரிமை மாற்றம் குறித்த
நடவடிக்கைகளுக்கும் அதிகாரம்
அளித்து பொது அதிகார பத்திரம்
எழுதிக்கொள்ளப்பட்டது என்றும்
அதன்படி மனு கட்டிடத்தை
சுற்றியுள்ள இடத்தில்
இம்மனுதாரர் கலை மற்றும்
நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும்
சாமான்களை வைத்து மாணாக்கர்களுக்கு
கலை பண்பாடு மற்றும் நடனம்
குறித்த பயிற்சிகளை அளித்து
வந்தார் என்றும் இந்த
எதிர்மனுதாரரிடம் மனு
கட்டிடத்திற்கு உரிய வாடகையை
கேட்டபோது தர முடியாது என
மறுத்து அடியாட்களை வைத்து
இவ்வெதிர்மனுதாரரை மிரட்டினார்
என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ம.சா.1.
தன்னுடைய குறுக்கு
விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி
கொடுத்த அதிகார ஆவணத்தின்படி
இம்மனு எதிர்மனுதாரருக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது
என்றும் கிருஷ்ணமூர்த்திக்கு
வீட்டு வசதி வாரியத்தால் மனு
சொத்து ஒதுக்கப்பட்டுள்ளது
என்றும் கிருஷ்ணமூர்த்திக்கும்
தனக்கும் 20 வருட
காலம் பழக்கம் என்றும்
சாட்சியமளித்துள்ளார்.
26. இ;ந்த
எதிர்மனுதாரர் 01.01.2005ம்
தேதியிட்ட வாடகை ஒப்பந்தப்படி
மனு கட்டிடத்தில் கிருஷ்ணமூர்த்தி
என்பவரிடம் வாடகைதாரராக
இருக்க ஒப்புக்கொண்டு
31.12.2006ம் தேதி வரை
வாடகை தொகை செலுத்திக்கொண்டு
வந்ததையும் இந்த எதிர்மனுதாரர்
தன்னுடைய விசாரணையில்
ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் இவ்வெதிர்மனுதாரர்
மனு கட்டிடமானது மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு
முழுமையாக பாத்தியப்பட்டது
அல்ல என்றும் ஆகவே மனு கட்டிடத்தை
பொறுத்து பொது அதிகார பத்திரம்
எழுதிக்கொடுப்பதற்கு மேற்படி
கிருஷ்ணமூர்த்திக்கு எவ்வித
தகுதியும் உரிமையும் இல்லை
என்று ஆட்சேபனை உரை தாக்கல்
செய்து வாதிட்டுள்ளார். AIR 2002 SC
1061 J.J. Lal (P) Ltd.. எதிராக
M.R.
முரளி என்ற வழக்கில்¸
வாடகைதார் ஒருவர்
தான் குடியிருக்கும் வீட்டின்
உரிமையாளரை ஏற்றுக்கொண்டு
வாடகை செலுத்திவிட்ட பின்னர்
வீட்டின் உரிமையாளருக்கு
வீட்டினைப் பொறுத்து
முழுஉரிமையாளர் அல்ல என
மறுப்பது இந்திய சாட்சிய
சட்டம் பிரிவு 116ன்
கீழ் முரண்தடை கோட்பாட்டால்
வாடகைதாரர் தடைசெய்யப்பட்டுள்ளார்
என தீர்மானிக்கப்பட்டது
27. இந்த
எதிர்மனுதாரர் 01.01.2005ம்
தேதியில் ஏற்பட்ட வாடகை
ஒப்பந்தம் மூலம் கிருஷ்ணமூர்த்தி
கட்டிட உரிமையாளர் என
ஏற்றுக்கொண்டு அவரிடம்
வாடகைதாரராக ஒப்புக்கொண்டும்
வாடகையை 31.12.2006ம்
தேதிவரை செலுத்திவிட்டு
தற்போது மனு கட்டிடத்தில்
மேற்படி கிருஷ்ணமூர்த்தி
என்பவர் முழு உரிமையாளர்
இல்லை என மறுத்துள்ளார்.
அவர் இவ்வெதிர்மனுதாரர்
நிலச்சுவான்தாரரான கிருஷ்ணமூர்த்தியை
நிலஉரிமையாளர் அல்ல என
மறுப்பதற்கு இந்திய சாட்சிய
சட்டம் 116ன்படி
முரண்தடை கோட்பாட்டால் தடை
செய்யப்பட்டுள்ளார் என்றே
இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
28. மேலும்
இந்த எதிர்மனுதாரர் தரப்பு
சாட்சி எ.ம.சா.4
தன்னுடைய விசாரணையில்
தான் தமிழ்நாடு வீட்டு
வசதிவாரியத்தில் உதவியாளராக
பணிபுரிந்து வருவதாகவும்
மனு கட்டிடமானது கிருஷ்ணமூர்த்தி
என்பவருக்கு 29.01.1988ம்
தேதியில் ஒதுக்கீடு செய்து
உத்திரவு வழங்கப்பட்டது
என்றும் அந்த உத்திரவு தான்
எ.ம.சா.ஆ.5.
என்றும் மனு கட்டிடத்தை
31.03.1988ம் தேதியில்
கிருஷ்ணமூர்த்தி வசம்
ஒப்படைக்கப்பட்டது என்றும்
மனு சொத்துக்கு உரிய மின்
கட்டணமும் வீட்டு வரியும்
வீடு ஒதுக்கீடுதாரரால்
செலுத்திவரவேண்டும் என்றும்
வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கிவிட்டாலே
அந்த கட்டிடத்தை பொறுத்து
ஒதுக்கீடுதாரர் தான்
முழுஉரிமையாளர் என்று
சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்மனுதாரர்தரப்பு
சாட்சியப்படி மனுதாரரின்
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி
தான் கட்டிடத்தின் முழுஉரிமையாளர்
என நிரூபிக்கப்பட்டுள்ளது
என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.
29. தமிழ்நாடு
கட்டிடங்கள் (குத்தகை
மற்றும் வாடகை) கட்டுப்பாடு
சட்டம் பிரிவு 10(2)(எii)
படி கட்டிட உரிமையாளருக்கு
அந்த வீட்டில் உள்ள உரிமையை
மறுத்து வாடகைதாரர் எடுக்கும்
கோரிக்கை நியாயமற்றவை என்பது
பற்றி கட்டுப்பாட்டு அலுவலருக்கு
தெளிவு ஏற்பட்டால் அந்த
கட்டிடத்தை கட்டிட உரிமையாளரிடம்
ஒப்படைக்க வேண்டும் என்று
உத்திரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
30. இந்த
எதிர்மனுதாரர் தன்னுடைய
ஆட்சேபனையிலும் வாதுரையிலும்
இம்மனுதாரரான சுலைமானுக்கு
இம்மனுவை தாக்கல் செய்ய எவ்வித
உரிமையும் தகுதியும் இல்லை
எனவும் 14.09.2009ம் தேதி
ஏற்பட்ட பொது அதிகார பத்திரம்
தன்னை எவ்விதத்திலும்
கட்டுப்படுத்தாது என்றும்
கட்டிட உரிமையாளரின் முகவர்
என்ற முறையில் இம்மனுவை
தாக்கல் செய்வதற்கு எவ்வித
தகுதியும் உரிமையும் இல்லை
என வாதிடப்பட்டது.
31. தமிழ்நாடு
கட்டிடங்கள் (குத்தகை
மற்றும் வாடகை கட்டுப்பாடு)
சட்டம் பிரிவு 2(6)ன்
படி கட்டிட உரிமையாளர் என்பவர்
தானாகவோ அல்லது மற்றவர்கள்
சார்பாகவோ அல்லது ஒரு முகவராகவோ
பொறுப்பானவராகவோ நிர்வாகியாகவோ
காப்பாளராகவோ இருந்து கட்டிடம்
ஒரு வாடகைதாரருக்கு விடப்பட்டால்
அந்த வாடகையை பெறுகிறவர்
அல்லது வாடகை பெறுவதற்கு
உரிமையுடையவர் எவரையும்
கட்டிட உரிமையாளர் என்று
சொல்ல உள்ளடக்கும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பிரிவு படி
இம்மனுதாரர் கட்டிட உரிமையாளரின்
அதிகாரம் பெற்ற முகவர் ஆவார்
என்பது ம.சா.ஆ.1.
ஆவணத்தின் மூலம்
தெரியவருகிறது. ம.சா.ஆ.1.
ஆவணப்படி இம்மனு
கட்டிடத்தை பொறுத்து கிரையம்
ஈடு ஒத்தி பரிவர்த்தனை ஆகிய
பந்தகங்களுக்கு உட்படுத்தவும்
மனையிட சம்பந்தமாக ஏதேனும்
தாவா தாக்கல் செய்ய வேண்டியிருந்தாலும்
எதிர்வாதம் செய்யவும்¸
வக்காலத்து¸ மனுவில்
கையெழுத்து செய்யவும்
கிருஷ்ணமூர்த்தி சர்பாக
அனைத்து வில்லங்க விவகாரங்களை
மேற்கொள்ளவும் அதிகாரம்
அளித்து அப்பத்திரமானது
14.09.2009ம்தேதியில்
எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட ம.சா.ஆ.1.
ஆவணப்படி இம்மனுதாரர்
கட்டிட உரிமையாளரான
கிருஷ்ணமூர்த்தியின்
பொதுஅதிகாரம் பெற்ற
அங்கீகரிக்கப்பட்ட முகவர்
ஆவார். வாடகை
கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு
2(6)ன் படி இம்மனுதாரர்
சுலைமான் கட்டிட உரிமையாளர்
என்ற வரையறைக்கு உட்பட்டவர்
ஆவர். ஆகவே இம்மனுதாரருக்கு
எதிராக அனைத்து தாவா மற்றும்
மனுக்களை தாக்கல்செய்து
அதன்மூலம் பரிகாரம் கோருவதற்கு
தகுதியுடையவர் என்றே இந்நீதிமன்றம்
தீர்மானிக்கிறது.
32. எதிர்மனுதாரர்தரப்பில்
எ.ம.சா.2ஆக
இளமதி என்பவர் விசாரணை
செய்யப்பட்டுள்ளார். அவர்
தன்னுடைய விசாரணையில் மனு
கட்டிடத்தில் புனரமைப்பு
மற்றும் கட்டுமான பணிகளை
செய்ததாகவும் அதற்கு ஆதரவாக
உத்தேச மதிப்பீடு மற்றும்
செலவு தொகை ரசீதையும்
கொடுத்ததாகவும் அவை எம.சா.ஆ.3.
மற்றும் 4ஆக
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்மனுதாரர்/வாடகைதாரர்
தன்னுடைய குறுக்கு விசாரணையில்
கட்டிடத்தில் புனரமைப்பு
மற்றும் கட்டுமான பணிகளை
செய்வதற்கு மனுதாரரிடம்
அல்லது மனுதாரரின் முதல்வர்
கிருஷ்ணமூர்த்தியிடம்
எவ்விதமான எழுத்துமூலமான
சம்மதமும் பெறப்படவில்லை
என சாட்சியமளித்துள்ளார்.
இந்த எதிர்மனுதாரரின்
ஆட்சேபனையில் மனு கட்டிடத்தில்
புனரமைப்பு பணிகள் செய்ததாகவோ
புதிய கட்டுமான பணிகளை
மேற்கொண்டதாகவோ எவ்வித
உரைகளும் குறிப்பிடாத நிலையில்
அது குறித்த சாட்சியத்தை
ஏற்றுக்கொள்ள இயலாது என்றே
இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
33. எதிர்மனுதாரர்தரப்பில்
எம.சா.3 ஆக
G.ராஜசேகரன் என்பவர்
விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய விசாரணையில்
மனு கட்டிடத்தை எதிர்மனுதாரர்
விற்கப்போவதாக கூறி கிரைய
முன் தொகையாக ரூ.1 ½ லட்சம்
மனுதாரர் வசம் கொடுத்ததாகவும்
அது தனக்கு தெரியும் என்றும்
சாட்சியமளித்துள்ளார்.
எதிர்மனுதாரர்/வாடகைதாரர்
தன்னுடைய குறுக்கு விசாரணையில்
தாவா கட்டிடத்தை கிரையம்
பெறுவதற்காக முன்தொகை ரூ.1
½ லட்சம் கொடுத்ததற்கு
எவ்வித ரசீதோ அல்லது கிரைய
ஒப்பந்த ஆவணம் எதுவும்
எழுதிக்கொள்ளவில்லை என்று
சாட்சியமளித்துள்ளார்.
இந்த எதிர்மனுதாரர்
தன்னுடைய ஆட்சேபனையில் மனு
கட்டிடத்தை கிரையம் பெற வேண்டி
ரூ. 1 ½ லட்சம்
மனுதாரருக்கு கிரைய முன்தொகையாக
கொடுத்ததாக புதிய சங்கதியை
அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேற்கண்ட புதிய சங்கதியை
நிரூபிக்கும் பொறுப்பானது
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு
103¸ 103ன்படி எதிர்மனுதாரருக்கே
உள்ள நிலையில் இந்த எதிர்மனுதாரர்
கிரைய ஒப்பந்தம் செய்ததற்கோ
முன்தொகை கொடுத்ததற்கோ எவ்வித
ஆவணங்களையும் எதிர்மனுதாரர்தரப்பில்
முன்னிடாததால் இந்த எதிர்மனுதாரர்
ஆட்சேபனை உரையில் கூறியுள்ள
புதிய சங்கதியை நிரூபிக்கவில்லை
என்றே இந்நீதிமன்றம்
தீர்மானிக்கிறது.
34. இந்த
எதிர்மனுதாரர் கடந்த மார்ச்
2007ம் மாதம் முதல்
இதுநாள்வரை எவ்வித வாடகை
தொகையையும் வேண்டுமென்றே
செலுத்தாமல்இருந்து வருகிறார்
என்றும் மனு கட்டிடத்தை காலி
செய்யாமல் எவ்வித சட்டப்படியான
உரிமையும் இல்லாமல் குடியிருந்து
கொண்டு வருகிறார் என்பதும்
இருதரப்பினர்களின் சாட்சியம்
மற்றும் சான்றாவணங்கள்
அடிப்படையில் தெரியவருகிறது.
ஆகவே மனு கட்டிடத்திலிருந்து
இந்த எதிர்மனுதாரரை
வெளியேற்றிக்கொள்ள
உத்திரவிடவேண்டியது சட்டப்படியும்
நியாயப்படியும் சரி என்றே
இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
35. இறுதியாக
மனுதாரரின் மனு அனுமதிக்கப்படுகிறது.
செலவு தொகை இல்லை.
எதிர்மனுதாரர் இந்த
உத்திரவு ஏற்பட்ட 30
நாட்களுக்குள் மனு
கட்டிடத்தில் உள்ள தன்னுடைய
சுவாதீனத்தை காலி செய்து¸
காலி மனுக்கட்டிடத்தை
மனுதாரர் வசம் ஒப்படைக்க
இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
No comments:
Post a Comment